#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர்
#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர் தொன்றுதொட்டு நீண்ட காலமாக ஒரே நிலப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் பழங்குடிகள் எனப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி மொழியும் குடும்ப, மற்றும் சமூக பழக்கவழக்கங்களும் கொண்டுள்ளனர், மேலும் அப்பகுதியில் உள்ள செடி, கொடி மரம், விலங்குகளை சார்ந்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள். இன்று ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான், பசிபிக் தீவுகள், இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் உள்ளனர். உலகிலேயே பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் ஆபிரிக்கா கண்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 8% மேல் பழங்குடிகள் உள்ளனர். பழங்குடி பற்றி ஆய்வு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக இந்திய வரலாற்றிலும் குறிப்பாக தமிழ்நாடு வரலாற்றிலும் பழங்குடி பண்பாடு பெரும் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் ஆயிரம் பேருக்கு 54 பேர் பழங்குடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று நாகரீக குடிகள் என்று கூறப்படுபவர்கள் கூட பழங