Posts

Showing posts from 2020

குறும்பர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய 14-15 நூற்றாண்டு கன்னட மொழியில் உள்ள கல்வெட்டு...

Image
குறும்பர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய 14-15 நூற்றாண்டு கன்னட மொழியில் உள்ள கல்வெட்டு... குறும்பர்களுக்கு கொடுக்கப்பட நிலக்கொடை பற்றியது.வடிவி கெளடா,ராமன்ன கெளடா, மல்லைய கெளடா ஆகியோர் இந்தகல்லை நிறுவினர்.  கொடையாளி உள்ளூர் தலைவன் ஏரதிம்மநாயகன். பஸவோஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிகாரி வெட்டினான். 3,4,5,6 வரிகளில் சில எழுத்துகள் தெளிவில்லை. 14-15ம் நூ. இருக்கும். This is an inscription of dry land gift (koDuge hola) to a hero belongs to kuruba jaati (name not clear) by the local chieftain Erathimmanayaka. Stone laid by Vatavigowda,RaamaNagowda and Mallayya Gowda. Stone made by Basavoja, write up by Atikaari. There are some characters in line 3,4,5,6 are not clear. This inscription belongs to 14-15 century CE.  - Prof.P.V Krishnamurthi இடம்:  கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டம், கூடலூர் உள்ள பீர்தேவரு கோயில் உள்ளது தமிழக எல்லை பகுதி.. படங்கள் மு. மீனாட்சி சுந்தரம் நன்றி திரு கன்னடப் பேராசிரியர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, சுகவன முருகன் .    

குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்

Image
#குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம் ____________________________________ ____________________________________ குறும்பர் பழங்குடி மக்களின் முக்கியக் கலை சேவையாட்டம் ஆகும் . சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும் . தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம். கைகளில் உண்மையான 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும் . பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து வளர்த்து எடுத்திருக்கின்றனர் . ஆனால் ஒரு பழங்குடியின மக்களின் கலை காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும் பழங்குடியின மக்கள் தங்களின் கலை  பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுக்காத்து வந்திருக்கின்றனர் . தங்களது தொல்பெரும் கலையைச் சிற்பங்கள் மூலம்

குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..

Image
குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..  உண்டல பத்மன்னா கதை: ------------------------------------------------  தொடக்க காலத்தில் காபுகளும் குறும்பர்களும் ஒன்றாக இருந்தனர் . இவர்களுடைய மூதாதையர்கள் மாசிரெட்டியும் நீலம்மாவும் கிழக்கு மலைப்பகுதியில் விறகு வெட்டி அவற்றை விற்று வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு ஆறுமகன்கள் பிறந்தனர் . இவர்களுடைய ஏழ்மையைக் கண்டு , சிவபெருமான் ஜங்கமனாக உருவெடுத்துப் பிச்சைக்காரனைப் போன்று வந்து நீலம்மாவிடம் விபூதியைக் கொடுத்தார் . உனக்குப் பிறக்கும் மற்றொரு குழந்தையால் செல்வாக்காய் இருப்பாய் என்று வரம் அளிக்கிறார் . அதன்படி  ஏழாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது . அக்குழத்தைக்கு உண்டல பத்மன்னா என்று பெயரிடுகின்றனர் . உண்டல் பத்மன்னா பிறந்த பிறகு விவசாயம் பெருகியது . வாழ்க்கை உண்டல செழிப்பாக மாறியது . யாதொரு வேலையும் செய்யாமல் இருந்ததைக் கண்டு அவன் சகோதரர்கள் அவன் மேல் வெறுப்பு உண்டாகி அவனைக் கொல்லவதற்குத் திட்டம் தீட்டினர் . புற்ற

குறும்பர் இன பழங்குடி மக்களின் வழிப்பாட்டிலுள்ள நடுகற்கள்..

Image
குறும்பர் இன பழங்குடி மக்களின்  வழிப்பாட்டிலுள்ள நடுகற்கள் .. இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சிம்பல்திராடி

நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்...

Image
 நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்... குறும்பர்களின் கோட்டை இருந்த இடமாகச் சுவடி குறிப்பிடும் ஊர்களில் நெறும்பூர் ஒன்றாகும் . அது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது . பாலாற்றின் கரை ஓரத்தில் உள்ளது .  ஐம்பது வயதுடைய திருமதி . மைதிலி இராசகோபாலாச்சாரியார் உதவியுடன் அங்கிருந்த கல்வெட்டுடன் கூடிய நீலமாணிக்கப் பெருமாள் கோவில் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ளப்பட்டன . கமலவல்லித் தாயாரும் நீலமாணிக்கப் பெருமாளும் எழுந்தருளியுள்ள அக்கோவில் குறும்பர்கள் வைணவத்திற்கு மாற்றப்பட்ட விவரத்தோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது .  கிராம அலுவலர் அரங்கநாதனும் அவருடைய துணைவியாரும் அவ்வூரைப் பற்றிய மற்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் , காணவும் உதவினார்கள் . அவர்கள் வழிபெற்ற விவரங்கள் பின்வருமாறு...  நெறும்பூரில் இப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் உள்ளனர் . அவர்களுள் ஆதிதிராவிடர்கள் நூறு வீடுகளிலும் , பார்ப்பனர்கள் ஐந்து வீடுகளிலும் , ரெட்டியார்கள் இருபது வீடுகளிலும் , வன்னியர்கள் ஐம்பது வீடுகளிலும் , முதலியார்கள் ஐந்து வீடுகளிலும் , யாத

கொல்லிமலை குறும்பர் புலிக்குத்தி நடுகல் காளப்பர் என்ற குறும்பர் மன்னன் சிற்பம். இடம் சேலம் அருங்காட்சியகத்தில் முன் பகுதியில் உள்ளது.

Image
கொல்லிமலை குறும்பர் புலிக்குத்தி நடுகல் காளப்பர் என்ற குறும்பர் மன்னன் சிற்பம்.  இடம் சேலம் அருங்காட்சியகத்தில் முன் பகுதியில் உள்ளது.

குறும்பர் கல்வெட்டு ஆதாரம்...

Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா எறுமூர் உள்ள கடம்பவனேஸ்வர் கோயிலுக்கு விள்ளாங்காட்டுர் குறும்பன் சிறுகன் என்ற குறுநில மன்னன் நந்தா விளக்கு எரிக்க 90 ஆடுகள் தானம் கொடுத்த கல்வெட்டுகள்.