மறைக்கப்பட்ட தியாகம்....??? எம் தமிழ்நாட்டில்...??? தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!!

மறைக்கப்பட்ட தியாகம்....???
எம் தமிழ்நாட்டில்...???

தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!!

1915  ஆண்டு
லிங்கண்ணன் அவரின் மகனாய்
பிறந்தார்...

பள்ளி பருவம் முதல் சுதந்திரப் போரட்ட ஆர்வமுடையவர்.

இளமைப்பருவத்திலே வட தமிழகத்தின்  போராட்ட தலைவர்களுள் ஒருவரை வளர்ந்தவர்.

இவர் சுதந்திரப் போராட்ட காலத்தில் 1940 ஆண்டு முதல் வடதமிழகத்தில் நடை பயணம் மூலம் "மக்களை ஒன்றுத்திரட்டி சுந்திரப்போராட்ட எழுச்சி" உரையாற்றினர்.

பின் 1941 ஆண்டு தமிழகத்தில் "தனிநபர்" சத்தியாகிரக போராட்டம் நடத்தி ஆங்கிலேயர்களை நடுங்கவைத்தவர்.இவர் போராட்ட குணத்தை கண்ட  ஆங்கிலேயர்கள் இவரை இரண்டுமாதம் வேலூர் சிறையில் அடைத்தனர்.

1942 ஆண்டு தியாகி கு.காமராசர்(முன்னால் முதலமைச்சர்) ,  தியாகி
கக்கன்(முன்னால் மந்திரி)
ஆகியோருடன் கருநாடக மாநிலத்தில் உள்ள அல்லிபுரத்தில் 9 மாதம் சிறைவாசம் கண்டவர்.

இவர் 1955 ஆண்டு மறைந்தார்...

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!