Posts

Showing posts from 2025

குறும்பர் பழங்குடி மக்கள் – மலைக்கும் அவர்கள் வைத்த பெயர்களும் அதன் அர்த்தங்களும்

தமிழகத்தின் மலை சார்ந்த பழங்குடி மக்களில் முக்கியமானவர்  குறும்பர் இன மக்கள் இவர்கள் வாழ்வியலும், கலாச்சாரமும், நம்பிக்கைகளும், சுற்றியுள்ள மலைகளோடு ஆழமாக இணைந்திருக்கின்றன. ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு காடும், ஒவ்வொரு பாறையும் – இவர்கள் வாழ்வில் தனிப்பட்ட அர்த்தத்தையும், கதையையும், நினைவையும் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. இவர்கள் அந்த மலைகளுக்குக் கொடுத்த பெயர்களும், அதனுடன் சேர்ந்துள்ள விளக்கங்களும் பின்வருமாறு: ⛰️ மலைகளின் பெயர்களும் அர்த்தங்களும் 1.  எத்துநோர(ஒற) ஏர்உழுதலுக்குப் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் உழவு முடித்து அந்த மலையில்தான் சென்று தங்கி உணவு உண்ணும். இரவு முழுவதும் காளைகள் அங்கேயே உறங்குவதால் அந்த மலை  எத்துநோர(ஒற)  என அழைக்கப்பட்டது. 2.  மக்கிறி கொபே முங்கில் நிறைந்த காடு. இங்கிருந்து முங்கிலால் கூடை, மொரம் போன்ற பயன்பாட்டு பொருட்கள் எடுக்கப்பட்டன. 3.  குறி மந்தை பெட்ட குறி ஆடு, மாடு மந்தை இடும் இடம். 4.  சுன்றே ஒட்டு முள் நிறைந்த கரடு காடு. 5.  தொட்டு பெட்ட பெரிய மலை. 6.  அல்லுகு அசர பெட்ட பள்ளத்துக்கு அப்பால் அமைந்த மலை. 7....

குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

Image
குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன. இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். பூமியின் வயது பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார். விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது. சூர்ய குடும்ப ஆயுள் பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது ...