குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

தமிழ்நாட்டில் குறும்பர் பழங்குடி  மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்றா தருமபுரி மாவட்ட த்தில் உள்ள  சித்தப்ப சாமி குறும்பர் பழங்குடியினர் குலதெய்வமாக
வணங்கும் நடுகல்.
தருமபுரி மாவட்டம்,
பாலக்கோடு வட்டம், அத்திமுட்லுவை அடுத்த பெலமாதனஹள்ளி என்ற இடத்தில் சித்தப்பசாமி அமர்ந்திருக்கிறார். குறும்பர் பழங்குடி இன மக்கள், தங்கள் குலதெய்வத்தை சிறிய தகப்பன் என்ற பொருளிலோ, சித்தி பெற்றவர் என்ற பொருளிலோ பயன்படுத்தவில்லை. வீரன் என்ற பொருளே அதில் பொதிந்துள்ளது.
சித்தப்ப சாமி என்று வணங்கப்படும் நடுகல்,புலிகுத்திப்பட்டான் வகையைச் சார்ந்தது.
இந்த நடுகல்லில், புலி ஒன்று ஆட்டை
கொல்வது போன்ற காட்சிச் சித்தரிப்புடன்,அருகில் வீரன் ஒருவன் அந்தப் புலியைக் குத்துவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘சித்திரகம்’ என்ற சொல் ‘சிறுத்தைப் புலி’ விலங்கைக் குறிப்பது. இது ‘சித்திரகாரம்’ என்றும் குறிக்கப்பட்டதைக்காணமுடிகிறது. (தமிழ்ப் பேரகராதி,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, (தொ
- 3, ப. 1413). இச் சொல்லே தெலுங்கு,
கன்னடத்தில் ‘சிறு(த்)தா’ என்று
வழக்குப்பட்டுள்ளது. சிறு(த்)தா என்பது
சிறுத்தைப் புலியைப் குறிப்பது. புலி
வீரன் என்று பொருள் படவே, இவ்வீரன்
‘சித்திரக சாமி’ என்றோ ‘சிறு(த்)தா வீரன்’ என்றோ அழைக்கப்பட்டிருக்கிறான்.
வீரன்,பிற்காலத்தில் சாமி என்றும் அப்பன் என்றும்
சுட்டப்பட்டான். சித்திரக சாமி என்ற பெயர்ச்
சொல்லே, திரிந்து ‘சித்தப்ப சாமி’ என்று
வழக்குப்பட்டுள்ளது என்பதை
உணரமுடிகிறது.

வீரபத்திரசாமி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில்
வசிக்கும் குறும்பர்கள் வணங்கும் நடுகற்கள்
சில, ‘வீரபத்திரசாமி’ பெயரில்
அழைக்கப்படுகின்றன. கிருஷ்ணாரப்பன்,
ஆஞ்சநேயர் பெயர் போன்றே, சைவ
தெய்வத்தின் பொருளில் வீரபத்திரசாமி
ஒலித்தாலும், வீரன் சாமி என்ற
சிறப்புப்பெயரே அவர்களது இனக்கடவுளின்
பெயரை தற்காலத்தில் சுமந்துவருகிறது.
இளைய தலைமுறையினர், ஆதிப் பெயர்ப்
பொருளைத் தவறவிட்டு, நடுகல்லை
புராணவயப்பட்ட இனக்கடவுளாகவே
கருதுகின்றனர்.

குறும்பர் பழங்குடி மக்கள், தங்கள் மூத்தோர் நினைவு நடுகல் சின்னங்களை
‘பெரியவர் கோயில்’ என்று பொருள் படும்‘தொட்டவர் குடி’ என்ற பெயரில்
அழைக்கின்றனர். பழமையான
நடுகற்களுக்கு அருகில், காலத்தால்
புதியதாக உள்ள நடுகற்களும்
நடப்பட்டுள்ளன. இக்கற்கள் யாரின்
நினைவாக எழுப்பப்பட்டனவோ அவர்களின்
சுட்டுப்பெயரிலேயே
அழைக்கப்படுகின்றன. இன்னும் சிறப்பாக,
ஊர்ப் பெயர் அடையுடன் அவர்களைச்
சுட்டுகின்றனர்.
“பாரூர் பெலதப்பசாமி, குந்தாலப்பள்ளி
பீரப்பா, ஊத்தகிரியப்பா,
நெத்திகிரியப்பா, மகனாடியம்மா,
சுகவம்மா, பென்னாகரம் சித்தப்பா,
மணியம்பாடி சித்தப்பா, மல்லியள்ளி
சித்தப்பா, மத்தூர் ராயர்” போன்ற
பெயர்களை, அண்மையில் தி.
சுப்பிரமணியம் அவர்களால்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
வெளிப்படுத்தியுள்ளது. (தி.
சுப்பிரமணியம், ‘தொல்லியல் நோக்கில்
குறும்பர் பழங்குடி’ கட், சமூக
விஞ்ஞானம், ஏப்ரல் – மே – சூன் 2015, ப. 46).
இப்பெயர்கள், இயற்பெயர் போன்று
தோற்றம் கொண்டாலும், இவை
இயற்பெயர்கள் அல்ல.இவர்களிடையே
வழக்கில் உள்ள சித்தப்ப சாமி பெயர், இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில்
விளக்கப்பட்டது. பீரப்பா என்பது வீரப்பா என்ற செல்லின் கன்னட வழக்கே ஆகும்.
வீரப்பா என்பது வீரன் + அப்பன் என்பதன்
குறுக்கம் என்பதும் முன்னர்
விளக்கப்பட்டது. ராயர் என்ற பின்னெட்டுப்
பெயர் மரபில் புதிய வழக்காகும். இது
விஜய நகர – நாயக்கர் - பாளையக்காரர்கள்
ஆட்சிக்காலங்களில் வழக்குப்பட்டது
என்பது எளிதில் விளங்குவது.
பெருவழக்கில், ராயர் என்பது, ஆளும்
தலைமைக்குரிய பேரரசன் / அரசன் /
பாளையக்காரர்களைக்
குறிப்பிடுகிறது. இப்பொருள் இங்கு
பொருந்துவதில்லை. இங்கு
குடித்தலைவன் என்ற பொருளே
அடையாளமாகிறது.
குறும்பர்களிடையே பழங்குடி மரபாகத்
தொடரப்படும் மூத்தோர் வழிபாடு, சில
சிறப்பான அடையாளங்களை
வழங்குபவையாக உள்ளவை. இம்மரபு
வழக்கம் குறித்து பின்வரும் அத்தியாயம்
ஒன்றில் விரிவாக ஆராயப்பட உள்ளது. இம்
மரபின்படி, மேய்த்தல் தொழில் காரணமாக
தொடர்ந்தோ, பருவகாலம் வைத்தோ
இடம்பெயரும் தருணங்களில் சில காலம்
ஒரு இடத்தில் தங்க நேரும்போது,
அவ்விடத்தில் தங்களின் குடிக்குரிய
மூதாதையரை ஒரு கல்லில் நிலை
நிறுத்திவைத்து வழிபடுகின்றனர்.
இதனால், அவர்களது இருப்பிடம் ஓர்
இடமாகவும், அவர்களது மூத்தோர்
கோயில் ஓர் இடத்திலும்
அமைந்துவிடுகின்றன. இருந்தாலும்,
அவர்கள் மீண்டும் பழைய இடத்துக்கு வந்து மூதாதையர் கோயிலை வழிபடும்
வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதன்
காரணமாக, அக்கோயில்களுக்கு ஊரின்
பெயரை இணைத்துக் கூறும் வழக்கம்
குறித்துச் சுட்டிக்காட்டப்படுவது (தி.
சுப்பிரமணியன், மேலது.,), ஊர்ப்பெயர்
மூத்தோர் பெயருடன் அடையாக
இடம்பெறும் மரபை விளக்கவல்லதாகும்.
குறிப்பு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொல்லேகள் தாலுக்காவில் குறும்பர் பழங்குடி மக்கள் இன்றும் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரதில் உள்ள நடுக்கல்லை வணங்கா ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
அவர்கள் இடத்தில் பேசிய போது எங்கள் முன்னோர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்றும் மேய்த்தல் தொழில் காரணமாக அமைவிடம் மாறியதாகவும் கூறினார்கள்
நன்றி
போசளி

தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவதை குறிக்கும்
குறும்பர் இன பழங்குடி மக்களின் சித்தப்பன் கோயில் சிலைகள்..

தனது பசு கன்று மேளகிரி மலைப் பகுதிகளுக்கு ஓடி புலியிடம் சிக்காமல்
இருக்க தனது கூந்தலையே கயிறாக கன்றின் கழுத்தில் கட்டி பாதுகாத்த சித்தியம்மாள் சிலை.குறும்பர் இன பழங்குடி மக்களின் குல தெய்வம்.

நன்றி திரு. அன்பழகன் ஆறுமுகம்

Comments

  1. இப்பகுதியில் குறிப்புப் பகுதி நீங்களாக மற்ற பெயராய்வுப் பகுதிகள், தினமணி, தொல்லியல் மணி, யுத்தபூமி தொடரின் அத்தியாயம்-7, நாள் 16/10/2016 அன்று வெளியான, “நெல் உகுத்துப்பரவும் கடவுளர்களின் தற்காலப் பெயர்கள்-2”-ல் ’சித்தப்ப சாமி’, ‘வீரபத்திரசாமி’ மற்றும் ’இடப்பெயரும் சுட்டுப்பெயரும் இணைந்த பெயர்கள்’ என நான் விவரித்து எழுதியவை சொல்லுக்குச் சொல் மாறாமல் உள்ளன.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!