குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள் சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்... விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் திண்டுக்கல் ஒரு முக்கிய அரசியல் எல்லையாக இருந்தது . திண்டுக்கல்லில் நாயக்கரின் ஆட்சி முகம்மதியர்களால் வீழ்த்தப்பட்டது . பின் இம்முகமதியர்கள் ஆட்சியை மைசூரில் ராஜாவிடம் சமாதானமாக ஒப்படைத்தனர் . மைசூரின் பிரதிநிதிகள் திண்டுக்கல்லில் கி . பி . 1742 ல் ஆட்சி நடத்தினர் . அவரது ஆட்சியில் திண்டுக்கல் சீமையானது 26 பாளையங்களாக இருந்தது . அவற்றுள் நிலக்கோட்டையும் ஒன்றாகும் . ஒவ்வொரு பாளையத்திற்கும் அப்போது ஒரு ஜமீன் என்று சொல்லக்கூடிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர் . இந்த நிலக்கோட்டை ஜமீனில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கூலப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார் . நிலக்கோட்டை ஜமீனில் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டிகள் ஆட்சி எல்லைக்குட்பட்டதாகும் . ஒவ்வொரு ஜமீனும் அவரவர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட கிராமங்களின் வருவாய் நிலைக்கேற்ப தமக்குத் தேவையான அரண்மனையை ஏற்படுத்தி , தனக்கு உண்மையானவர்களை அரண்மனைப் பணிக்கும் , வெளிப்பணிக்கும் பணியாளர்களை...
குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை நாம் யார்? நம் குறும்பர் சமுதாயம் (Palangudi Makkal Kurumban) எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது? நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்? இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குறும்பர் (Palangudi Makkal Kurumbar) சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும் காலம் தூரம் இல்லை. "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும். நம் சமுதாயம் ஆடு, மாடு (...
தமிழ்நாட்டில் குறும்பர் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்றா தருமபுரி மாவட்ட த்தில் உள்ள சித்தப்ப சாமி குறும்பர் பழங்குடியினர் குலதெய்வமாக வணங்கும் நடுகல். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமுட்லுவை அடுத்த பெலமாதனஹள்ளி என்ற இடத்தில் சித்தப்பசாமி அமர்ந்திருக்கிறார். குறும்பர் பழங்குடி இன மக்கள், தங்கள் குலதெய்வத்தை சிறிய தகப்பன் என்ற பொருளிலோ, சித்தி பெற்றவர் என்ற பொருளிலோ பயன்படுத்தவில்லை. வீரன் என்ற பொருளே அதில் பொதிந்துள்ளது. சித்தப்ப சாமி என்று வணங்கப்படும் நடுகல்,புலிகுத்திப்பட்டான் வகையைச் சார்ந்தது. இந்த நடுகல்லில், புலி ஒன்று ஆட்டை கொல்வது போன்ற காட்சிச் சித்தரிப்புடன்,அருகில் வீரன் ஒருவன் அந்தப் புலியைக் குத்துவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சித்திரகம்’ என்ற சொல் ‘சிறுத்தைப் புலி’ விலங்கைக் குறிப்பது. இது ‘சித்திரகாரம்’ என்றும் குறிக்கப்பட்டதைக்காணமுடிகிறது. (தமிழ்ப் பேரகராதி,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, (தொ - 3, ப. 1413). இச் சொல்லே தெலுங்கு, கன்னடத்தில் ‘சிறு(த்)தா’ என்று வழக்குப்பட்டுள்ளது. சிறு(த்)தா என்பது சிறுத்தைப் புலியை...
Bro nam muthalil payanpaduthiye pattam goundera illai nayakara
ReplyDelete