குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை நாம் யார்? நம் குறும்பர் சமுதாயம் (Palangudi Makkal Kurumban) எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது? நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்? இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குறும்பர் (Palangudi Makkal Kurumbar) சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும் காலம் தூரம் இல்லை. "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும். நம் சமுதாயம் ஆடு, மாடு (பண்டங்கள்) மேய்க்கும் பணியை மட்டுமே செய்து வந்திருக்கிறோம், வேறு எந்த தொழிலுக்கும் உகந்தவர்கள் அல்ல என்று தவறாக புனையப்பட்டி
தமிழ்நாட்டில் குறும்பர் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்றா தருமபுரி மாவட்ட த்தில் உள்ள சித்தப்ப சாமி குறும்பர் பழங்குடியினர் குலதெய்வமாக வணங்கும் நடுகல். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமுட்லுவை அடுத்த பெலமாதனஹள்ளி என்ற இடத்தில் சித்தப்பசாமி அமர்ந்திருக்கிறார். குறும்பர் பழங்குடி இன மக்கள், தங்கள் குலதெய்வத்தை சிறிய தகப்பன் என்ற பொருளிலோ, சித்தி பெற்றவர் என்ற பொருளிலோ பயன்படுத்தவில்லை. வீரன் என்ற பொருளே அதில் பொதிந்துள்ளது. சித்தப்ப சாமி என்று வணங்கப்படும் நடுகல்,புலிகுத்திப்பட்டான் வகையைச் சார்ந்தது. இந்த நடுகல்லில், புலி ஒன்று ஆட்டை கொல்வது போன்ற காட்சிச் சித்தரிப்புடன்,அருகில் வீரன் ஒருவன் அந்தப் புலியைக் குத்துவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சித்திரகம்’ என்ற சொல் ‘சிறுத்தைப் புலி’ விலங்கைக் குறிப்பது. இது ‘சித்திரகாரம்’ என்றும் குறிக்கப்பட்டதைக்காணமுடிகிறது. (தமிழ்ப் பேரகராதி,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, (தொ - 3, ப. 1413). இச் சொல்லே தெலுங்கு, கன்னடத்தில் ‘சிறு(த்)தா’ என்று வழக்குப்பட்டுள்ளது. சிறு(த்)தா என்பது சிறுத்தைப் புலியைப் குறிப்
குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை! நம் மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) ………….. சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் (Senjikottai Kotilingam Kurumban) கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை (Senjikottai Kotilingam Kurumban) இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கி
Comments
Post a Comment