குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று
குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று
காதல் வாழ்க்கை – தலையில் விழுந்த பூந்தொடை
இலக்கியக் காட்சிகள்:
ஆயர்பாடியில் ஒரு பெரிய மாட்டுப் பட்டி. அங்கே ஏறு தழுவல் நிகழ்ச்சி (காளையடக்கும் விளையாட்டு) நடைபெறவிருந்தது.
அதனைக் காண அக் கிராமம் முழுவதுமே திரண்டு எழுந்தது. ஏறு தழுவும் ஆர்வத்துடன் கட்டிளம் காளையர் பலர் பலவிதமான மலர் மாலைகளை அணிந்தவாறு ஒன்று திரண்டனர்.
அவர்களின் வீரத்தைக் கண்டு களிக்க வந்த ஆயர் குலத்து அழகிய நங்கையர் (ஆய்ச்சியர்) பரண்களின் மீது அமர்ந்திருந்தனர்.
விளையாட்டு வேளையும் நெருங்கிற்று. அரங்கத்துக்கு அடங்காக் காளைகள் ஏவப்பட்டன. அவை கொழுத்துப் பருத்துக் காணப்பட்டன.
வெள்ளை, சிவப்பு, கறுப்பு எனப் பலவகை நிறங்களைக் கொண்ட அவ் வெருதுகளின் கொம்புகள் கொந்தாலியைப் போலக் கூரியதாகச் சீவப்பட்டிருந்தன. ஊழித் தீ போல அவை சுழன்று ஓடித்திரிந்தன.
அஞ்சாத வீரர் அச்சந்தரும் மாடுகள் மீது பாய்ந்து அடக்க முயன்றனர். ஒன்று ஒருவனைக் கொம்பால் குத்தி விழுத்தியது. ஒன்று ஒருவனின் குடலைக் கிழித்தது. இன்னொன்று ஏற முயன்றவர்களை இடறி விழுத்தியவாறு ஓடித் திரிந்தது. எருதுகளின் கொம்புகள் இரத்தத்தால் சிவப்பேறின.
காளையர் பலர் காயமுற்றனர். காயத்தையோ பாயும் குருதியையோ பொருட்படுத்தாது சில வீரர் தொடர்ந்தும் ஏறு தழுவலில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்ததாக தோழிக்குச் சொல்கின்றாள் தலைவி.
தலைவி: ஏடி ஆட்டிடையருக்கும் மாட்டிடையருக்கும் கொல்லும் இயல்புடைய ஏறுகளைத் தழுவுதலே காரியமென எங்கள் சுற்றத்தார் தொழுவத்திலே காளைகளைச் செலுத்தி விட்டார்.
அத் தொழுவிடத்தே முரட்டுக் குணம் மிகுந்த செவி மறையாக இருந்த ஏற்றை அடக்கித் தழுவினான் ஒரு வீரன். அவனின் தலையிலே கிடந்த முல்லைப்பூ மாலையைக் கொம்பிலே எடுத்துக் கொண்டு அந்த ஏறு துள்ளிக் குதிக்கையில் அதன் ஒரு பகுதி என் தலையில் வந்து விழுந்தது. இழந்த பொருளை மீண்டும் பெற்றாரைப் போல் நான் (மிகவும் மகிழ்ந்து) அப்பூந்தொடையை எடுத்துத் தலையிலே சூடிக்கொண்டேன்.
அதுபற்றி என் தாய் கேட்டால் என்ன பதிலைச் சொல்ல ?
தோழி: அந்தப் பூ திருமணம் செய்ய விரும்பாத ஒருவனின் பூவன்றே ? தாய் கேட்டால் அதற்கு நான் செய்யத்தக்க தீர்வு என்ன ?
பேசாமல் சும்மா இரு.
தலைவி: சூடிய பூ மயிரில் மணத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாது சூடி விட்டேன். அயலான் பூவை மயலால் முடித்தாள் எனத் தாய் கேட்கின் நான் அவள் கோபத்துக்கு ஆளாகாமல் தப்ப முடியுமோ ?
தோழி: சரி சரி விடு கவலையை. நீ செய்த தவறெல்லாம் இனி அற்றுப் போகும்.
தலைவி: ஓ.ஓ. எவ்வாறு அவை நீங்கும் சொல்லு சொல்லு ?
தோழி: அவன் ஆயர் மகனாயின் நீ ஆயர் குலத்துப் பெண்ணாயின் அவன் உன்னை விரும்பியிருப்பானாயின் நீ அவனை விரும்பி இருப்பாயாகில் தாய் மிகவும் வருந்துவதற்குக் காரணம் எதுவும் இல்லை என்பதை அறிவாயாக.
தலைவி: அன்னை கருத்து இதுவென உனது மனம் சொல்லுமாயின் அவள் என்னை நோகாள்.
தோழி: இன்னுமா உனக்கு விளங்கவில்லை ? ஆயர் மகனையும் காதலிக்கிறாய். தாய் கோபிப்பாள் என்றும் அஞ்சுகிறாய். அப்படியாயின் நீ கொண்ட காதல் நோய்க்கு மருந்தொன்றும் இல்லை என்பதை விளங்கிக் கொள்.
தலைவி: மருந்து இல்லையேல் நான் வருந்தாமல் இருப்பேனோ ?
தோழி: இனி நீ வருந்த வேண்டியதில்லை. உன் தாய்க்கு உண்மை தெரிந்து விட்டது. கழுவி அழுக்கில்லாதிருந்த உனது கூந்தலில் வைக்க அவன்தான் பூவைத் தந்தான் என்று பிறர் மூலம் தாய் அறிந்து விட்டாள்.
அதன் பின் உன் தந்தையோடும் தமயன்மார் எல்லோரோடும் கலந்து ஆலோசித்திருக்கின்றாள். அவர்கள் அனைவரும் தெய்வமாகிய திருமாலே இவளுக்கு இவனைத் திண்ணியதாகக் காட்டியுள்ளதென மகிழ்ந்து பேசியுள்ளனர்.
அதனால் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் ஒழுகவல்ல அந்தத் தலைவனுக்கே உன்னைக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த உரையாடலைத் தரும் கலித்தொகைப் பாடல் இது
எல்லா இஃதொன்று கூறு குறும்பிவர்
புல்லினத்தார்க்கும் குடஞ்சுட்டவர்க்கும் - எம்
கொல்வேறு கோடல் குறையெனக்
கோவினத்தார்
பல்வேறு பெய்தார் தொழூஉ
தொழுவத்து
சில்லைச் செவிமறைக் கொண்ட அவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டங்காழ் கோட்டின் எடுத்துக் கொண்டு ஆட்டிய
ஏழை யிரும்புகர் பொங்க அப்பூ வந்து - என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
அதனை கெடுத்தது பெற்றார் போல்
கொண்டு யான் முடித்தது
கேட்டனள் என்பவோயாய்
இஃதொன்று கூறு
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ
மற்றிகா
அவன்கண்ணி யன்றோ அது
பெய்போது அறியாத்தன் கூழையுள்
ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாள் என்று
யாய் கேட்பின்
செய்வதில் ஆகுமோ மற்று
எல்லாத் தவறும் அறும்
ஓஓ அஃதது மாறும்
ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்யன் ஆயின் அவன்வெய்யை
நீயாயின்
நின்னைநோ தக்கதோ இல்லை மன்நின்
நெஞ்சம்
அன்னைநெஞ்சு ஆகப் பெறின்
அன்னையோ
ஆயர் மகனையும் காதலை கைம்மிக்க
ஞாயையும் அஞ்சுதி யாயின் அரிதரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்றி யான் உற்ற துயராயின்
எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி
மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறவன்
கண்ணிதந்திட்ட தெனக் கேட்டுத்
திண்ணிதாத்
தெய்வமால் காட்டிற்று இவட்கென்
நின்னை அப்
பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு
புல்லினத்தார்க்கும் குடஞ்சுட்டவர்க்கும் - எம்
கொல்வேறு கோடல் குறையெனக்
கோவினத்தார்
பல்வேறு பெய்தார் தொழூஉ
தொழுவத்து
சில்லைச் செவிமறைக் கொண்ட அவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டங்காழ் கோட்டின் எடுத்துக் கொண்டு ஆட்டிய
ஏழை யிரும்புகர் பொங்க அப்பூ வந்து - என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
அதனை கெடுத்தது பெற்றார் போல்
கொண்டு யான் முடித்தது
கேட்டனள் என்பவோயாய்
இஃதொன்று கூறு
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ
மற்றிகா
அவன்கண்ணி யன்றோ அது
பெய்போது அறியாத்தன் கூழையுள்
ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாள் என்று
யாய் கேட்பின்
செய்வதில் ஆகுமோ மற்று
எல்லாத் தவறும் அறும்
ஓஓ அஃதது மாறும்
ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்யன் ஆயின் அவன்வெய்யை
நீயாயின்
நின்னைநோ தக்கதோ இல்லை மன்நின்
நெஞ்சம்
அன்னைநெஞ்சு ஆகப் பெறின்
அன்னையோ
ஆயர் மகனையும் காதலை கைம்மிக்க
ஞாயையும் அஞ்சுதி யாயின் அரிதரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்றி யான் உற்ற துயராயின்
எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி
மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறவன்
கண்ணிதந்திட்ட தெனக் கேட்டுத்
திண்ணிதாத்
தெய்வமால் காட்டிற்று இவட்கென்
நின்னை அப்
பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு
(கலித்தொகை முல்லைக்கலி 07)
(குறும்பு இவர் - –முல்லை நிலத்து ஊரில் உள்ள; புல்லினத்தார் - –குறும்பர் ஆட்டு இடையர்; குறையென -– காரியமென; சில்லை - – முரண்பாடும்; கோட்டு அம் காழ் - – வளைவினை யுடைய அழகிய பூமாலை; கோடு - – கொம்பு; ஏழை இரும்புகர் பொங்க - – ஏழையாகிய பெரிய மறை ஏறு தள்ள; கூழை - – கூந்தல்; இகா - – தாழாத விரும்பாத; ஏதிலான் – - அயலான்; கண்ணி பூ வெய்தல் - – விரும்புதல்; அன்னையோ - – அன்னதன்மையோ, இன்னும் விளங்கவில்லையோ; மண்ணி - – கழுவி‘ மாசு அற்ற, அழுக்கு இல்லாத; திண்ணிதா - – உறுதியான; மால் - – திருமால், முல்லை நிலத்து தெய்வம்; பொதுவன் -– குறும்பர்(Palangudi Makkal Kurumban) இடையன்; அடை சூழ்ந்தார் - – கொடுக்கத் தீர்மானித்தார்)
இப்பாடல் கூறும் காதல் நிகழ்வு முல்லை நிலத்துக்குரியது. முல்லை நிலம் காடும் காடு சார்ந்த நிலப் பரப்பும் கொண்டது. பண்ணை வளர்ப்பும் வேட்டை ஆடலும் இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்களாக இருந்தன.
பண்ணை வளர்ப்பினைச் செய்யும் குறும்பர்(Palangudi Makkal Kurumbar) ஆயர் குலத்தவரின் விளையாட்டுகளில் ஏறு தழுவுதலும் ஒன்று.
இன்றும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மாட்டுச் சவாரியும் காளையடக்கும் விளையாட்டும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடு களிலும் இவ் வகை விளையாட்டுகள் போட்டி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.
Comments
Post a Comment