பழங்கால தமிழும் குறுபா மொழியும்:-

பழங்கால தமிழும் குறுபா மொழியும்:-
ஒரு மொழி சிதைவதால் மாற்றத்தால் மற்ற மொழிகள் உருவாகும், இது உலக நியதி உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுமே அப்படி தோன்றும், அது போல குறுபா  மொழியும்(Kuruba) பழங்கால தமிழ் வார்த்தைகள் சிதைய வழக்கொழிய வேறு மொழியாக மாற்றமடைந்து இருக்க வேண்டும், இல்லை தமிழ் போல் அதே வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம், ஏன்னா இப்படியோ அப்படியோன்னு மொழி விசயத்துலே ஒற்றை ஊகம் பலன் தராது, எனவே மற்றொரு ஊகத்தையும் கூறினேன், ஆனால் என்னை பொறுத்த வரை பழங்கால கொடுந்தமிழ் பல்லவர்கள்(Pallavarkal Kurubar)பேசி வந்த பிராக்கிருத மொழியுடன் கலந்து உருவானதே குறுபா(Kuruba)மொழின்னு கணிக்கிரேன்,
சரி தமிழில் ஒரு தன்மை இருக்கிறது, பழயன கழிந்து புது வார்த்தைகள் தோன்றி கொண்டே, இருக்கும். அவ்வாறு பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் குறுபா மொழியிலேயும்(Kuruba) 50% பழங்கால தமிழ் வார்த்தைகளுக்கு மேல வருதுன்னு சொல்லலாம் கூட சதவீதமே தரலாம், குறைந்த பட்சம் 50% பழங்கால தமிழ் வார்த்தைகள் னு சொல்ரேன்,  குறுபா(Kuruba) மொழியில மட்டும் இல்லே, தோடா,இருளா,படுகா,குடகு இந்த மொழிகளுலே பழங்கால தமிழ் வார்த்தைகள் பல புழக்கத்துலே இருக்கு,, இந்த திராவிட மொழிகள் நேரடியா தமிழுலே இருந்து பொறந்ததுன்னு சொல்லுவாங்க,,
இதுக்காக தமிழ்தான்னு சொல்ல முடியாது ஏன்னா ஒரு மொழி வேறு மொழியாக மாற்ற பட்டாலே, அது வேறு மொழியாகத்தான் சொல்ல வேண்டும், அது போல இன்று ஆங்கிலம்  பிரஞ்சு போர்ச்சுக்கள் எல்லாம் லத்தீன் கீரிக்கு மொழிகளின் சிதைவு, ஆங்கிலம் பிரஞ்சு மொழி வார்த்தைகளை அத்தனையையும், கிரீக்கு,லத்தீன்னு சொல்லலாம், அந்த சொல் உச்சரிப்புகள சிறு மாற்றம் செய்து ஆங்கிலம் பிரஞ்சாக்கிட்டாங்க,
அதே போலத்தான் குறுபா மொழி(Kurumba)வார்த்தைகள் பழங்கால தமிழ் வார்த்தைகள்தான்,
கெப்பா(ன்)-கெப்பி,சூரா(ன்)-சூரி,
பேரா(ன்)-பேரி
மள்ளா(ன்)-மள்ளி,
அல்லா(ன்)-அள்ளி
மறவா(ன்)-மறத்தி
கள்ளா(ன்)-கள்ளி
தாதன், நாகன்,பருப்பன், இது போல பல குறும்பா(Kurumba) மக்கள் பயன்படுத்தி வருர பழங்கால தமிழ் வார்த்தைகள், அது அது அந்த அந்த பண்பை செயலை குறிக்க இன்றும் பயன்படுத்தி வரும் குறுபா(Kuruba) மொழியில புழக்கத்துலே உள்ள பழங்கால தமிழ் வார்த்தைகள், அந்த வார்த்தைகளுக்கு இன்னோரு சிறப்பு இருக்கு, குறும்பா(Kurumbar) மக்களுக்கு 300 குலங்கள் இருக்கிறது, அந்த குலம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள், அந்த 300 குலத்தின் பெயர்கள்தான் அவை அதை மனிதர்களுக்கும் ஆண் பெண்களுக்கு அந்த சொற்களை பால் வழியில் வைப்பார்கள், ஆனால் அது தமிழுலே சாதி பேற இப்போ வச்சுகிட்டு திரியுராங்க, அந்த 300க்கும் மேற்பட்ட குலங்கள் பேரு எல்லாமே பழங்கால தமிழ் பேருதான்னு தாரளமா சொல்லலாம், குலங்கள் அப்புடின்றது குறுபா மொழியில பரம்னு சொல்லுவோம், பரம்ன்றது கூட பழங்கால தமிழ் சொல்தான்,,,
அடுத்து தமிழுலே  திங்கள மூனு விசயத்துக்கு பயன்படுத்துவாங்க, மாதத்த குறிக்க, நிலவ குறிக்க, வார நாள குறிக்க, அதே இரண்டு திங்கள அதே பொருளுக்கு இன்னும் குறுபா மொழியிலே(Kurumba) புழக்கத்துலே இருக்கு, திங்குளு - மாதத்தை குறிக்கும் குறும்பா மொழி(Kurumba),
திங்கள் - மாதத்தை குறிக்கும் பழங்கால தமிழ் வார்த்தை,
அதே புளி திங்குளு - நிலவை குறிக்கும் குறுபா மொழி,
திங்கள் -நிலவை குறிக்கும் பழங்கால தமிழ் சொல்,
இதுல குறுபா மொழியில (Kurumba) புளி திங்கள்னு சொல்லுவோம், புளின்னா வெள்ளைனு அர்த்தம், அதாவது புளின்ற சொல்லும் பழங்கால தமிழ் சொல்தான், அதாவது வெளிர் நிறம், வெள்ளை நிறத்துக்கு வெளிர் நிறம்னு பேரு, அந்த வெளிர் குருபாவுலே புளி(buli) ஆகி போச்சு, புளி திங்குளுன்னா -வெண்ணிலா,,
அதே மோருக்கு புளி நீருன்னு சொல்லுவோம் குறுபா மொழியிலே,
நிறங்களுலே 5,6 நிறங்கள்தான் நம்ம மனிதர்கள் புரிந்து பழக்கத்துல வச்சுருக்க நிறங்கள், அதுல குறுபா(Kurumba) மொழியில உள்ள புளி அப்புடின்ற வெள்ளை நிறத்தை குறிக்கும் வெளிர் அப்புடின்ற தமிழ் நிறத்த குறிக்குற சொல்தான், அதே கருப்ப குறுபா(Kurumba) மொழியிலே கரிய ன்னுதான் சொல்வோம், அந்த கரியன்றதும் பழங்கால தமிழ் நிற்த்த குறிக்குற சொல்தான், அடுத்து அருசுன இது மஞ்சள குறிக்குற பழங்கால சொல், மஞ்சல் கிழங்கையும் மஞ்சல் நிறத்தையும் குறிக்குற தமிழுலே மஞ்சல், அத குறுபா(Kurumba) மொழியிலே அருசுனனு சொல்லுவோம், அருசுனன்றதும் பழங்கால தமிழ் வார்த்தைதான், மத்த படி பச்சை,நீளம் இது அப்படியே குறுபா(Kurumba)மொழிக்கும் பொதுவான நிறங்கள்தான்,,
அடுத்து ஒரு அழகான பழங்கால தமிழ் வார்தைதைய சொல்ரேன், கேளுங்க கொய்து னு கேள்வி பட்டு இருப்பீங்க, ரொம்ப அழகான வார்த்தை கொய்துன்னா பழங்கால தமிழ் வார்த்தை அதை இப்போ அறுக்குறதுனு புது சொல்ல தமிழுலே பயன்படுத்துராங்க, ஆனா அந்த கொய்துன்ற பழங்கால தமிழ் வார்த்தை குறுபா மொழியிலே கோது ன்னு இன்னைக்கும் புழக்கத்துலே இருக்கு,,,,
அக்கி-அரிசி,அண்ணு- பழம், னு சொல்லுவோம்,,
அடுத்து, உறவுகள பத்தி சொல்ரேன் குறுபா உறவு சொல்லும் கன்னட உறவு சொல்லும் ஒரு சிலது ஒன்னா இருக்கும், அந்த உறவுகள சொல்ரேன்,
அக்கா -தமிழ்,கன்னட, குறுபா
அண்ணா- கன்னடம், குறுபா
அண்ணன் - தமிழ்,
அண்ணி -தமிழ், அண்ணு இன்ட்ரு -குறுபா மொழி, அதாவது அண்ணனு+இன்ட்ரு = அண்ணுன்ட்ரு -அண்ணி - குறுபா மொழி,
மாவா(மாமா),அத்தை சேம் சொல்தான் தமிழ் கன்னடம் குறுபா மொழியிலே, அப்பா  மூனு மொழியிலேயும் அப்பாதான், குறுபா மொழியில நாதினி ன்னா தமிழுலே நாத்துனா,கொழுந்தியா,
அதுவும் பழங்கால தமிழ் வார்த்தைதான், குறுபா மொழியிலே மைதா ன்னா  தமிழுலே கொழுந்தன், குறுபா மொழியிலே தொச ன்னா தமிழுலே மருமகள், குறுபா மொழியிலே தெங்கின்னா தமிழுலே தங்கை, அதுவும் பழங்கால தமிழ் வார்த்தைதான், அலியா ன்னா குறுபா மொழி தமிழுலே மருமகன், தொட்டாப்பா ன்னா பெரியப்பா, சிக்காப்பான்னா சித்தப்பா, அதே கன்னடத்துலேயும் குறுபா மொழியிலேயும் பொண்டாட்டிங்குர தமிழ் சொல்லுங்க மாறு படும், கன்னடத்துலே பொண்டாட்டி - ஹெந்தி,
குறுபா மொழியில பொண்டாட்டிக்கு - இன்ட்ரு, இப்படித்தான் இருக்கும், அண்ணன் பொண்டாட்டிய கன்னடத்துல குறுபா மொழியிலே கூப்பிடுரது அண்ட்ரு, அந்த அண்ட்ருன்ற வார்த்தை அண்ணுனு + இன்ட்ரு இந்த வார்த்தை சேர்த்து அழைக்க படுவது,,
ஒரு சில வார்த்தைகள் கன்னடத்துக்கும் குறுபா மொழிக்கும் பழங்கால தமிழ் வார்த்தைக்கும் நூல் அளவுலே உச்சரிப்புகள் மாறும்,,
அடுத்து மிக முக்கியமான அழகான பழங்கால சொல், ஓளவை இது தமிழ் தமிழ்னு பேசுர பல அறிஞர்களுக்கும் அந்த சொல் என்னானே தெரியாது, அதாவது ஒரு பெண் புலவரோட பெயர்னு நெனச்சு கிட்டு இருக்காங்க, அது அவுங்களோட அறியாமை ஓளவை என்பது பழங்காலத்தில் தமிழில் அம்மாவை அழைக்க பட்ட வார்த்தை, அன்னை, ஆயா,ஆத்தா எல்லாம் கால மாற்றங்களுக்கு ஏற்ப அம்மாவா குறிப்பிட்டு வந்த வார்ததை அதில் ஆயா,ஆத்தா இன்னைக்கு வயசான பெண்களை அழைக்க பயன்படுத்துராங்க, அம்மா 19ம் நூற்றாண்டில் படித்த மேல் தட்டு மக்களிடம் இருந்து, ஆயா ஆத்தானு அம்மாவ கூப்பிட்ட மக்கள் கிட்ட சமீப காலத்துல புகுந்தது சினிமா மூலம்னு சொல்லலாம், இன்னும் இரண்டு சந்ததிகளுக்கு முன்னாடி உள்ளவர்கள் அம்மாவ ஆயா ஆத்தா னுதான் கூப்பிடுவாங்க நானே கண்கூடாக பல ஊர்களில் எங்க ஊருலேயே பாத்தது, நவீன சந்ததிகள்தான் அம்மானு கூப்பிடுராங்க, அது போல அம்மான்ற வார்த்தை அந்த காலத்துல அவ்வை,ஓளவைனு சொல்லி இருக்காங்க, அந்த பெண் புலவரை பெயர் சொல்லி அழைப்பது மரியாதை குறைச்சலாக இருக்கும் என்று, ஔவை,அவ்வை என்று அழைத்து மேலும் சிறப்பூற்ற இப்போது அம்மையார் என்பது போல் ஓளவையார் என்று அழைத்தும் உள்ளனர், அந்த அம்மாவை குறிக்கும் ஓளவை எனும் பழங்கால தமிழ் சொல்தான் குறுபா மொழியிலே அம்மாவ எனக்கு முந்துன சந்ததி வரை கூப்பிட்டு வந்த வார்த்தை, அவ்வை- அம்மா, அஜ்ஜவை - பாட்டியம்மா, தொட்டவை - பெரியம்மா, சிக்கவை - சின்னம்மா, இந்த வகையில் அவ்வை என்ற தாயை குறிக்கும் சொல்ல குறுபா மொழியிலே இன்றளவும் பயன்படுத்துராங்க, அம்மான்றது இப்போ டிரண்டா இருக்கவும் எல்லா மொழியிலேயும் இப்போ அம்மானு கூப்பிடுராங்க,என் செட் குறுபா மொழி சந்ததிகளும் அம்மானு கூப்பிடுராங்க,,,
இன்னும் பல உதாரணங்கள் இருக்கு அடுத்த பதிவுலே பதியுரேன், அதாவது பழங்காலத்தில் பயன்படுத்தி தமிழ் மொழி விட்ட பழங்கால தமிழ் வார்த்தைகள் பல குறுபா மொழியிலே வருது,,  
இலக்கியங்களுலே உள்ள பழங்கால தமிழ் வார்த்தைகள் தற்போது தமிழ் பேசுரவங்கள விட, குறுபா மலையாளம் மற்ற படுகா தோட இருளா மொழி காரவரவர்கள் அந்த சொல்லை எளிதாக விளங்கி கொள்வார்கள், அதற்க்கும் ஒரு தெளிவான புரிதல் மிக அவசியம், அதே போலத்தான் குறுபா மொழியும் பழங்காலத்தில் புழக்கதில் இருந்த பழங்கால தமிழ் வார்த்தைகள் குறுபா மொழயில் 50% முதல் 70% வரை சொல்லலாம்,
இன்னோரு உதாரணத்தை கூட சொல்கிறேன், வடக்கே உள்ள மொழிகளையும் இந்தியையும் தனியாக காட்டுவது கஸ்டம், மற்றவர்களுக்கு புரியாது, தேசிய கீதம் வங்க மொழியில் எழுதப்பட்டது, ஆனால் அது இந்தியிலேயும் அப்படித்தான் வரும் ரொம்ப வித்யாசம் இல்லே, நெறையா பேருக்கு வங்க மொழி பற்றி தெரியாதவர்களுக்கு நமது தேசிய கீதத்த இந்தினுதான் நெனைப்பாங்க அதாவது இந்தி தெருஞ்சவங்க, துமாரா நாம் க்யா ஹே னா இந்தி, தூமாரா நாம் கீ னா வங்க மொழி, இதுல என்ன வித்யாசம், இதுதான் மொழியியல்,,
இத வச்ச அந்த மொழி இந்த மொழின்னு சொல்ல முடியாது சொல்ல கூடாது, அது தனி மொழிதான், கால ஓட்டத்துல பழக்கபடுத்தி புழக்கத்துலே இருக்க வார்த்தைகள் உருமாறி உருவாவதே ஒவ்வொரு மொழியும், 
சரி இது போல மற்றொரு சொல் கண்டு பிடிப்போடு குறுபா மொழியில் உள்ள பழங்கால தமிழ் வார்த்தைகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்,,,,,,,, 
நன்று அழகர்சாமி

Comments

  1. உங்கள் கட்டுரை அருமை - உங்களோடு எப்படி தொடர்பு கொள்ளலாம் ? நன்றி

    ReplyDelete
  2. Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
    Kuruba Matrimony

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!