பெருமிழலைக் குறும்ப நாயனார்
இது 'பெருமாநல்லூர்' என்று வழங்கியது; இப்பெயரும் இன்று மாறி, வழக்கில் "தேவமலை" என்று வழங்குகிறது. (இங்குள்ள மலையின் பெயரே தேவமலையாகும்.)
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- குன்றைக் குடைந்து கோயில் எடுத்துள்ளனர்.
- ஊரயமான மலைப் பகுதியில் கோயில் தனிமையாகவுள்ளது.
- இது பெருமிழலைக் குறும்ப நாயனாரின் அவதார தலம். நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தேவர்மலையில் கொண்டாடப்படுகின்றது.
அவதாரத் தலம் : மிழலைநாட்டு மிழலை (அல்லது மிழலைநத்தம் எனும் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலம்) - ஆய்வுக்குரியது. வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : தேவமலை என வழங்கும் மிழலைநாட்டு மிழலை (பெருமிழலை). குருபூசை நாள் : ஆடி - சித்திரை.
தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது.
- பெரிய குடவரைப் பிள்ளையார் உள்ளார்.
- சில படிகள் கீழிறங்கிப் பார்த்தால் சில முனிவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
- மண்டபத்தில் அம்பாள் திருமேனி தனியேயுள்ளது; தேவ தீர்த்த முள்ளது.
("தேவமலை"க்கு அருகில் உள்ளது பேறையூர். இங்குள்ள நாகநாத சுவாமி கோயில் மிகப் பிரசித்தி பெற்றப் பிரார்த்தனைத் தலமாகும். எண்ணற்ற நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. இஃது ராகு தோஷ நிவர்த்தி தலம். இங்குச் செல்வோர் இப்பேறையூர்ச் சிவாலயத்தை அவசியம் தரிசித்து வரலாம்.)
குறிப்பு :- 'மிழலை நாட்டு மிழலை' என்னும் இத்தலம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலமென்று கூறுவாரும் உள்ளார்.
மிழலை நாட்டு மிழலை (தேவமலை)
இறைவர் திருப்பெயர்: | தேவநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | தேவநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | தேவ தீர்த்தம் |
வழிபட்டோர்: | குறும்ப நாயனார். |
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டை - காரைக்குடிச் சாலையில், நடன சமுத்திரம் ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடந்து - வலமாகப் பிரியும் பொன்னமராவதிச் சாலையில் வந்து - பேறையூர் சாலையில் பிரிந்து பேறையூரை அடைந்து - நற்சாந்துப்பட்டி போகும் சாலையில் 2 கி.மீ. சென்று - குமரமலைக்குப் போகும் சாலையில் 1 கி.மீ. சென்றால் - "தேவமலை"க்குப் போகும் வண்டிப்பாதை வரும், அதிலிருந்து 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். (கடினமான பயணம், ஆங்காங்கே விசாரித்துச் செல்வது நலம்.)
பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 1706-1
வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 1706-2
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 1706-3
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 1706-4
2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 1707-1
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 1707-2
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 1707-3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 1707-4
3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 1708-1
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 1708-2
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 1708-3
புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 1708-4
4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 1709-1
மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 1709-2
சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 1709-3
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 1709-4
5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 1710-1
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 1710-2
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 1710-3
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 1710-4
6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 1711-1
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 1711-2
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 1711-3 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 1711-4
7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 1712-1
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 1712-2
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 1712-3
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 1712-4
8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 1713-1
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 1713-2
மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 1713-3
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 1713-4
9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 1714-1
நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 1714-2
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 1714-3
எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 1714-4
10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 1715-1
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 1715-2
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 1715-3
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 1715-4
11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 1716-1
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 1716-2
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 1716-3
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 1716-4
Comments
Post a Comment