குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2
குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2
குறும்பர் இன பழங்குடி மக்கள் பழங்காலத்தில் மந்திரம் என்பதனையே ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர் என்றும் அக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கருதப்படுகின்றனர் . தற்காலச் சூழலில் இக்கலையில் முழுமையாக ஈடுபாடற்று காணப்படுகின்றனர் .
இதற்கான காரணமென சமூகச் சூழலில் மாற்றத்தினையே சுட்டிக் காட்டலாம் .
குறும்பர் பழங்குடி இனத்தைத் தவிர்த்து பிற பழங்குடிகளிடம் மந்திர மருத்துவம் என்பது மிக சொற்ப அளவில் காணப்படுகிறது..
குனவே பினிசல்
குறும்பர் இனத்தில் ' குனவே பினிசல் ' எனக் கூறுவது குழந்தை பினி எனப் பொருள் கொள்ளலாம் . இந்நோயை ' பாலகிரி ' எனவும் கூறுகின்றனர் . இந்நோய் மிகக் கடுமையான நோயாகக் கருதுகின்றனர் . இந்நோய்க்கு மருத்துவம் செய்யத் தகுந்த மருத்துவரையே நாடுகின்றனர் .
நோய் ஏற்பட காரணங்கள்
பாலகிரி எனப்படும் குனவே பினிசல் நோய் ஏற்பட முக்கியமானதாக இரண்டு காரணங்கள் என கூறுகின்றனர் .
அவையாவன :
1 . பெண்கள் தகாத முறையில் கர்ப்பம் அடைந்துவிட்டு , பின்பு தவறான முறையை உணர்ந்து அக்கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு வரும் சூழ்நிலையில் குழந்தைகள் உள்ள வீட்டிற்குள் வந்தால் , அக்குழந்தையை பாலகிரி நோய் தாக்கும் .
2 . ஆண்கள் விலைமாதர்களிடம் உறவு கொண்டுவிட்டு வந்தவுடன் தம்மை தூய்மையாக்காது , அதாவது குளிக்காமல் எதாவது குழந்தையைத் தொட்டுத் தூக்கினாலோ அல்லது அருகில் சென்றாலோ அக்குழந்தைக்குப் பாலகிரி நோய் ஏற்படும் எனக் கூறுகின்றனர் .
நோய் தாக்கும் இலக்குகள்
குனவே பினிசல் எனப்படும் ' பாலகிரி ' நோய் குழந்தைகளை மட்டும் தாக்கக்கூடிய நோய் எனக் கருதுகின்றனர் . பெரும்பாலும் ஐந்து மாதம் நிரம்பிய குழந்தையிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தைகள் வரை இந்நோய்க்கு ஆளாகின்றனர் எனக் குறிப்பிடுகின்றனர் .
நோயின் தன்மைகள்
இந்நோயின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் தன்மையையுடையன . நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கிழக்கண்ட வகையில் பாதிப்பு காணப்படும் .
அவையாவன,
1 . தீராத தாகம் ஏற்படும்.
2 . வாயிலிருந்து நுரை தள்ளியவாறு இருத்தல்.
3 . கை , கால்கள் உதறிக்கொண்டேயிருத்தல்
4.கண்கள் இரண்டும் மேல் நோக்கிச் சொருகுதல்
5 . உடல் முழுவதும் அடிக்கடி இழுத்துக் கொள்ளுதல்
6 . திடப் பொருள் உணவை சாப்பிட மறுத்தல்
7 . பேச்சோ முனகலோ வராதிருத்தல்
என்பவைகளாகப் பல அறிகுறிகதுடன் குனவே பினிசல் நோய் ஏற்படுகின்றது .
மருந்தாகும் பொருட்கள்
உலர் பொருட்கள் மற்றும் பச்சைப் பொருட்கள் என இருவகைப் பொருட்கள் மந்திர மருத்துவத்தில் பயன்படுகின்றன .
' குனவே பினிசல் ' எனப்படும் பாலகிரி நோய்க்கு பச்சை மருந்தாக செடிகளில் வேர்கள், பட்டைகள் ஆகியவை பயன் படுகின்றது எனக் கூறுகின்றனர் .
பதனக்காய் எனப்படும் கத்தரிக்காய் செடியின் வேர் .
கும்புஞ கிடா எனப்படும் ரத்தசூரி செடியின் இலை ,
மின்னல் கிடா எனப்படும் செடியின் இலை ,
வேங்கை மரத்தின் பட்டை ,
வாழை மரத்தில் வேர் ,
மொந்த வாழை ஒரு துண்டு .
உல்லமஜ்ஜிகே எனப்படும் புளிச்சங்கரை ..
என இவ்ணைத்துப் பச்சை பொருட்களுடன் உலர் பொருளான யானைத் தந்தம் சிறிதளவு தேய்த்துக் கலந்து மருந்துப் பொருளாக்கப்படும் எனக் கூறுகின்றனர் .
மந்திரச் சொற்கள் .
குனவே பினிசல் நோய்க்கு ஓதப்படும் மந்திரமானது பிற மந்திரத் தினைப் போல் அடுக்கடுக்காகக் கூறப்படும் தன்மையுடையது .
இம் மந்திரப் பாடலானது சக்தியையும் , சிவனையும் வணங்கித் தொடங்குவதாக அமைகின்றது .
சிவனையும் , பார்வதியையும் தங்களது குலதெய்வம் எனும் எண்ணப் போக்கும் அக்கடவுள்களின் துணையோடு மந்திரம் நடத்தப்படுவதனையும் தெரியப்படுத்துகின்றனர் .
நோய்க்கு மருந்தாகும் பொருட்களின் இருப்பிடமான மலையாள நாட்டில் வளத்தைக் குறிக்க பச்சை நாடு பச்சை மலையாளம் எனக் கூறுகின்றனர்.
மலையாள நாடு மாந்திரீகத்தில் சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
ஒன்று முதல் பத்து முறை நோயை தர்ப்பதாக் மந்திரச் சொற்கள் அமைகின்றன .
ஓம் சக்தி சிவன்
ஒந்து புடே புடிசிதே
ஓர் கட்டின கட்டினே
இது இந்தோட தீர்மானம்
சிவன் அருளிய இம்மந்திரத்தால் ஒன்று முதல் இருபத்தி ஐந்து முறை நோயைத் தடுப்பதாக பொருள் கொள்ளும் "கட்டினே" எனும் சொற்கள் காணப்படுகின்றன .
மருத்துவர் படித்த மந்திரமானது தெய்வத்தின் வரமே எனும் நன்றியும் இப்பாடலில் வெளிப்படுகின்றது .
மருத்துவச் செயல்முறை
மருந்தாகும் பொருட்களை நன்கு அரைத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் முழுவதும் நன்கு புசிவிடவேண்டும் . சிறிதளவு மருந்தை சுடுநீரில் கலந்து குடிக்கக்கொடுக்க வேண்டும் . இம்மருத்துவத்தைத் தொடர்ந்து மூன்று முதல் ஆறு நாள் செய்தும் , அக்கால கட்டத்தில் வீட்டில் புளி , மாமிசம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றன . இத்தகைய முறையில் குனவே பினிசல் எனும் பாலகிரி நோயை குறும்பர் இன பழங்குடி மக்கள் குணப்படுத்துகின்றனர் .
நம் இனம் சார்ந்த தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்.
ReplyDelete